பல்வேறு இன மக்களும், பழங்குடியினரும் கிள்ளையிலே ஒரு தாய் மக்களாகக் கூடி வாழ்கின்றனர்.
"சாதிப் போர் வேண்டாம்
சாதிப்போர் வேண்டும்"
என்ற முழக்கத்தை முன் வைத்துப் பேருராட்சி நிர்வாகத்தை நடத்துகிறார் தலைவர் கிள்ளை ரவிச்சந்திரன் அவர்கள்.
இந்துக் கடவுளான பூவராக சுவாமிநாதன் வலம் வரும்போது, இசுலாமிய தர்காவில் மரியாதை செய்து அனுப்பப்படுவது மன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது
"சாதி எனும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி"
என கிள்ளை வாழ் தமிழர் சாடிக் குலாவி ஒன்றுபட்டு வாழ்கின்றனர்.
பொங்கல் திருநாளை இசலாமியருடன் கூடி, சமத்துவப் பொங்கல் எனக் கிள்ளை ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சியில் கொண்டாடி மகிழ்கின்றனர்
இந்திய மக்கள் எவ்வாறு பேதமின்றி ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு சமத்துவபுரமாக கிள்ளை பேரூராட்சி திகழ்கிறது