சிறப்பு நலத்திட்டப் பணிகள் |
1. விஷ வண்டு ஒழிப்பு
கிள்ளை மக்களைத் தாக்கி மரண வாசலுக்கு அழைத்துச் செல்லும் விஷ வண்டுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளன.
2. தெருநாய் தொல்லை நீக்கம்
தெருநாய்களின் தொல்லை ஒழிக்கப்பட்டுள்ளது.
3. கொசுத் தொல்லை நீக்கம்
கொசு மருந்து மூலம் கொசுத் தொல்லையிலிருந்து மக்கள் விடுதலை பெற வழி செய்யப்பட்டுள்ளது.
4. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை
சூழல் மாசடைதலை தவிர்க்கும் பொருட்டு பிளாஸ்டிக் தம்ளர் முதலான பொருட்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
5. நீரைக் கெடுக்கும் தொழிலுக்குத் தடை
கிராமப்புறங்களில் உள்ள நல்ல நீரை உப்பு நீராக மாற்றும் கழிவுகளை உண்டாக்கும் இறால் பண்ணை முதலான தொழில்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
6. சுனாமி நினைவு நாள் ஊக்கம்
சுனாமி நினைவு நாளன்று பெண்களுக்கு தையல் மெஷின்களும், மீனவருக்கு மீன்பிடி வலைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
40 ஊனமுற்றோருக்கு தலா 10,000/- ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
|